டாஸ்மாக் - கடவுளா அல்லது சாத்தானா? - பகுதி 2
தமிழ் நாட்டில் உள்ள டாஸ்மாக் பற்றிய விவரத்தை இந்த இணையதளத்தில் காணலாம் -
http://tasmac.tn.gov.in/நமது மக்களின் குடியை கெடுக்கும் சாரயத்தை சப்லை செய்பவர்களின் பட்டியல் இங்கே காணலாம் - http://tasmac.tn.gov.in/suppliers.htm
அதனுடைய விலைகளை இங்கே காணலாம் - http://tasmac.tn.gov.in/Mrp.htm
தமிழக அரசுக்கு இப்போது 6000 கோடி (2005-06) ரூபாயாக வருமானம் வருகிறது. இது பற்றிய புள்ளி விவரம் இங்கே காணலாம் - http://tasmac.tn.gov.in/Turnover.htm
இதிலிருந்து பார்த்தால், ஒவ்வொரு வருடமும் பல ஆயிரம் கோடி பணத்தை நாம் வீன்னடிக்கின்றோம். நல்ல வளர்ச்சிக்கு செலவிடாமல், கெட்ட பாதையில் போய்க்கொண்டிருக்கிறோம்.
குடிக்காரர்களின் மனதை மாற்ற வேண்டும். எப்படி எய்ட்ஸ் போன்றவற்றிக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துகிறோமோ, அதே போல் நாட்டினுடைய வளர்ச்சியைப் பற்றி விழிப்புணர்வு முகாம் நடத்தி அதில் மக்களுக்கு, நாம் நாடு வளருவதற்கான திட்டத்தை விவரிக்க வேண்டும். இப்படி இருந்தால் நல்ல இருக்கும் என்று ஒவ்வொருடைய மனதில் பதிய வைக்க வேண்டும்.
மக்கள் நினைத்தல் தான் நாடு முன்னேறும். முதல்வன் நினைத்தால் அல்ல. முதல்வன் வழி காட்டியாகத்தான் இருக்க முடியும். அதனை பின்பற்றி, நாடு வளர்ச்சியடைய மக்கள் முன்வர வேண்டும். இரு கையை சேர்த்து தட்டினால் தான் சத்தம் வரும். அதேபோல் முதல்வனும் மக்களும் சேர்ந்து பாடுபட்டால்தான் நாடு முன்னேறும்.
சிந்திப்பீர்! சிந்திப்பீர்! சிந்திப்பீர்!
Labels: கடவுள், சாத்தான், டாஸ்மாக்