ஒரு நாள் முதல்வன்?
ஒரு நாள் முதல்வன்? என்ற தலைப்பை வைத்து தொடங்குகிறேன். இது சாத்தியம் தான் என்று படத்தில் கூறப்படுகிறது. சங்கரின் முதல்வன் படம் தான் மூல காரணம் இந்த பதிவை தொடங்குவதற்கு. கடந்த சில நாட்களாக முதல்வன் திரைப்படத்தை தற்செயலாக பார்க்கப் முற்படுகிறேன். அதனை பார்க்கும் பொழுது நான் முதல்வரனால் என்ன என்று தோன்றுகிறது. அதே போன்று, அர்ஜுன் செய்யும் நல்ல காரியங்களையெல்லாம் நான் செய்வேனா என்று யோசிக்கிறேன். படத்தில் எல்லாம் சுலபம். நிஜ வாழ்க்கையில் செய்யமுடியுமா?....
நான் முதல்வரனால்... என்ற கட்டுரையை சிறு வயதில் தேர்வுகளில் கேட்கப்படும். சிறுவர்கள் இரண்டு அல்லது முன்று பக்கத்திற்கு எழுதுவார்கள். நான் எழுதப்போகும் இந்த பதிவு இரண்டு அல்லது முன்று பதிவோடு அல்லாமல், ஒரு முதல்வன் எவ்வாறு இருந்தால் நன்றாக இருக்கும் என்று யோசித்து என் மனதில் தோன்றியதை எழுதுகிறேன்.
நம் நாடு முன்னேராமல் இருப்பதற்கு என்ன காரணம்?
1. அவரவர், அவரது வேலையை சரிவர செய்யாதிருத்தல்
2. எதுக்கேடுத்தாலும் லஞ்சம். பொதுவாக தெரியாது. ஆனால் எல்ல இடத்திலும் உள்ளது. நடக்கிறது.
3. (சுயநல)அரசியல்
4. பொதுமக்களின் அறியாமை
5. இன்னும் கண்னுக்கு தெரியாதவை...
என்னடா இவன் ஒழுங்கு மாதிரி சொல்லுரானே என்று யோசிப்பீர்கள். ஆனால் இது மறைக்கமுடியாத உண்மை. எப்படியாவது என்னால் முடிந்தவரை சுட்டிக்காட்டி அதற்கு தீர்வும் சொல்கிறேன். தவறுகளை சுட்டிக்காட்டுவது சுலபம். அந்த இடத்தில் இருந்து யோசித்து முடிவு எடுப்பது கடினம்.
எதேனும் பிழை கண்டுபிடித்தீர்கள் என்றால் திருத்த உதவவும். உங்களது கருத்தினையும் நான் வேண்டுகிறேன்
Labels: தமிழ் நாடு, முதல்வன்